செய்திகள்
இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 60,753 பேருக்கு தொற்று
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,86,78,390 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 97,743 பேர் குணமடைந்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. பாதிப்பு குறைந்ததையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. அதேசமயம் உயிரிழப்பு ஏற்ற இறக்கமாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,86,78,390 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 97,743 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,60,019 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 27,23,88,783 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. பாதிப்பு குறைந்ததையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. அதேசமயம் உயிரிழப்பு ஏற்ற இறக்கமாக உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 60,753 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 2,98,23,546 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படியுங்கள்...இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் இன்னும் ஓராண்டு நீடிக்கும்- விஞ்ஞானிகள் தகவல்
நாடு முழுவதும் ஒரே நாளில் 1,647 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,85,137 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,86,78,390 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 97,743 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,60,019 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 27,23,88,783 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.