செய்திகள்
நிதிஷ் குமார்

பீகாரில் அங்கன்வாடி, தொடக்கப் பள்ளிகள் நவ. 15ல் திறப்பு -நிதிஷ் குமார் தகவல்

Published On 2021-09-24 09:28 GMT   |   Update On 2021-09-24 09:28 GMT
அங்கன்வாடி, தொடக்கப்பள்ளிகள் திறப்பு குறித்து அறிவித்த நிதிஷ் குமார், தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறி உள்ளார்.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில் அங்கன்வாடி மற்றும் தொடக்கப்பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

நவம்பர் 15ம் தேதி முதல் அங்கன்வாடிகள் மற்றும் தொடக்கப்பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News