எடப்பாடி பழனிசாமி மாமனார் மரணம்: டாக்டர் ராமதாஸ்- விஜயகாந்த் இரங்கல்
சென்னை:
டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாமனார் காளியண்ணன் சேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையத்தில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இது தனிப்பட்ட முறையில் பெரும் இழப்பு ஆகும். மாமனாரை இழந்து வாடும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:-
சேலம் மாவட்டம் அம்மாப்பாளையத்தில் வசித்து வரும் முதல்-அமைச்சர் பழனிசாமியின் மாமனார் காளியண்ணன் அகால மரணமடைந்தார் என்ற செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாத்தியமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.