செய்திகள்
சிறப்பு ரெயில்

தசரா பண்டிகைக்காக திருப்பதியில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம்

Published On 2020-10-17 03:13 GMT   |   Update On 2020-10-17 03:13 GMT
தசரா பண்டிகைக்காக திருப்பதியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
திருப்பதி:

நாடு முழுவதும் தசரா பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்காக திருப்பதியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. திருப்பதியில் இருந்து லிங்கம்பள்ளிக்கு 20-ந்தேதியில் இருந்து தினமும் மாலை 6.55 மணிக்கு இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் லிங்கம்பள்ளியில் இருந்து திருப்பதிக்கு 20-ந்தேதியில் இருந்து தினமும் மாலை 5:30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது.

திருப்பதியில் இருந்து அமராவதிக்கு 20-ந்தேதியில் இருந்து தினமும் மாலை 3.10 மணியளவில் இயக்கப்படுகிறது. மறுமார்க்கத்தில் அமராவதியில் இருந்து திருப்பதிக்கு 22-ந்தேதியில் இருந்து தினமும் மாலை 6:45 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது என தெற்கு மத்திய ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News