செய்திகள்
விபத்து

நெல்லையில் மாடு மீது ஆம்புலன்ஸ் மோதி நோயாளி பலி

Published On 2021-11-24 07:05 GMT   |   Update On 2021-11-24 07:05 GMT
நெல்லையில் மாடு மீது ஆம்புலன்ஸ் மோதி நோயாளி பலியானார். அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:

தென்காசி அருகே உள்ள ஆய்குடியை அடுத்த அகரகட்டு கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி லதா (வயது 31). இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

நேற்று இரவு மேல் சிகிச்சைக்காக அவரை ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பாளை மண்டல அலுவலகம் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது, எதிரே ரோட்டில் திடீரென மாடு குறுக்கே பாய்ந்தது. இதனால் ஆம்புலன்ஸ், மாடு மீது மோதி, கவிழ்ந்தது.

இதில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி லதா மற்றும் அவரது தாயார் செல்வி, சகோதரர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சிறிது நேரத்தில் நோயாளி லதா பரிதாபமாக இறந்தார். அவரது தாயார் செல்வி மற்றும் சகோதரர் கிருஷ்ணமூர்த்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News