ஆன்மிகம்
ஆதி பராசக்தி

ஆதி பராசக்தி வழிபாட்டு மன்றத்தில் சிறப்பு வழிபாடு

Published On 2021-07-21 08:47 GMT   |   Update On 2021-07-21 08:47 GMT
அம்மாப்பேட்டையில் இயங்கி வரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் சிறப்பு வழிபாடு, தியானம் நடைபெற்றது.வழிபாட்டில் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்துகொண்டனர்.
அம்மாப்பேட்டையில் இயங்கி வரும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கொரோனா வைரஸ் போன்ற கொடிய தொற்று நோய்களிலிருந்து மக்களையும் காக்க வேண்டி சிறப்பு வழிபாடு, தியானம் நடைபெற்றது.

வழிபாட்டை மன்ற தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வழிபாட்டில் ஆதிபராசக்தி உருவ சிலை, மற்றும் பூஜை படம் ஆகியவற்றுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெற்றன. வழிபாட்டில் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News