செய்திகள்
நடுத்தெருவில் பாம்பும், கருந்தேளும் சண்டையிட்டபோது எடுத்த படம்

நடுத்தெருவில் பாம்பும், கருந்தேளும் சண்டையிட்டதால் பரபரப்பு

Published On 2019-10-04 03:31 GMT   |   Update On 2019-10-04 03:31 GMT
சின்னபாபு சமுத்திரத்தில் நடுத்தெருவில் பாம்பும், கருந்தேளும் சண்டையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கண்டமங்கலம்:

கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம் செட்டித்தெருவை சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவர் வீட்டின் முன்பு நடுத்தெருவில் நேற்று பகல் கருந்தேள் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு திடீரென ஒரு சாரைப்பாம்பு வந்தது. அந்த பாம்பைப் பார்த்ததும் தேள் “குடுகுடு”வென ஓடிச்சென்று பாம்பை கடித்தது. அதைத் தொடர்ந்து தேளுக்கும், பாம்புக்கும் சண்டை நடந்தது. சுமார் ½ மணி நேரம் இரண்டும் சண்டையிட்டபடியே இருந்தன.

அதனை வேடிக்கை பார்க்க அந்த தெருவைச் சேர்ந்தவர்கள் அங்கு கூடிவிட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அப்பகுதி மக்கள் பாம்பை விரட்டிவிட்டனர். பாம்பும் உயிர்பிழைத்தால் போதும் என்று ஓடிவிட்டது. 
Tags:    

Similar News