செய்திகள்
கோபிநாத்தையும், மனு கொடுக்க வந்த பெற்றோரையும் படத்தில் காணலாம்.

வாலிபர் கொலை - சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க கோரி பெற்றோர் கண்ணீர் மனு

Published On 2021-10-18 10:56 GMT   |   Update On 2021-10-18 10:56 GMT
கொலையாளியை கண்டுபிடிக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும் விபத்து வழக்காக மாற்ற முயற்சிக்கின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வீரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மாரியம்மாள். இவர்கள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

எனது மகன் கோபிநாத் (20) கடந்த 18. 7. 2021 அன்று அதிகாலை தாராபுரம் கன்னிமார் கோவில் அருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தாராபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் இதுவரை குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிக்கவில்லை. இதற்கிடையே எங்களது போனில் பேசிய மர்ம நபர் ஒருவர் உன் மகன் எப்போ வருவான் என்று கேட்டார். இது குறித்த தகவலையும் போலீசாரிடம் கொடுத்து விட்டோம். 

ஆனால் கொலையாளியை கண்டுபிடிக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் விபத்து வழக்காக மாற்ற முயற்சிக்கின்றனர். எனவே எனது மகனை கொலை செய்த கொலையாளியை கண்டுபிடிப்பதற்காக இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர். 
Tags:    

Similar News