உள்ளூர் செய்திகள்
பிளஸ்-2 பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் பார்வையிட்டார்.

வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது

Published On 2022-05-05 09:31 GMT   |   Update On 2022-05-05 09:31 GMT
வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது- 73,387 பேர் எழுதினர்.
வேலூர்:

தமிழகத்தில் கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. 

இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததால் நடப்பு ஆண்டுக்கான அரசு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது.

வேலூர் மாவட்டத்தில் 73 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. மொத்தம் 7,527 மாணவர்கள் 8,580 மாணவிகள் உள்பட 16,107 பேர் தேர்வு எழுதினர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 60 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 120 பள்ளிகளை சேர்ந்த 13,855 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 56 மையங்க–ளில் இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு நடந்தது. இதில் 14,014 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 252 பள்ளிகளில் படிக்கும் 14,501 மாணவர்கள் 14,910 மாணவிகள் என மொத்தம் 29 ஆயிரத்து 411 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உட்பட 8 உயர்மட்ட அதிகாரிகள் தலைமையில் 165 கண்காணிப்பு அலுவலர்கள் மேற்பார்வை–யில் ஈடுபட்டனர்.

அரசு பொதுத் தேர்வுகளை முன்னிட்டு நிலையான படை உறுப்பினர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்படுகின்றன.

இது தவிர மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர், அனைவருக்கும் கல்வி உதவி திட்ட அலுவலர் தலைமையில் தேர்வு கண்காணிப்பு குழுவினர் அரசு பொதுத் தேர்வு களை கண்காணித்து வருகின்றனர்.

தேர்வுக்கான வினாத்தாள்கள் மையத்தில் இருந்து துப்பாக்கி ஏந்திய ஆயுதப்ப–டை காவலர்கள் உதவியுடன் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, தேர்வு தொடங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறைகளில் சமூக இடைவெளியை விட்டு அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு அறைக்குள் தண்ணீர் பாட்டில், பேனா, ஹால்டிக்கெட் கொண்டு செல்ல அனுமதிக்க பட்டனர். எலெக்ட்ரானிக், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்க படவில்லை.
Tags:    

Similar News