வழிபாடு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை

Published On 2022-03-19 04:22 GMT   |   Update On 2022-03-19 04:22 GMT
தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு கருட சேவை நடப்பது வழக்கம். அதன்படி இந்த மாதத்துக்கான பவுர்ணமி கருடசேவை நேற்று இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நடந்தது. தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கருடசேவையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, முன்னாள் அதிகாரி அனில்குமார் சிங்கால், கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி, பேஷ்கர் ஸ்ரீஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News