செய்திகள்
பிரதமர் மோடிக்கு கவர்னர் கிரண்பெடி வாழ்த்து
பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு இந்த நாளில் எனது சார்பாகவும், புதுச்சேரி மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி:
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு இந்த நாளில் எனது சார்பாகவும், புதுச்சேரி மக்கள் சார்பாகவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று நோயில் இருந்து வெளியேற நமது நாடு கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது.
இந்த சவால்களை எதிர்கொள்ள உலக சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உங்களது உறுதியான, வலுவான தலைமை தான் தற்போது உள்ள காலத்தின் தேவை. வளர்ந்த நாடுகளுடன் சேர்ந்து உலக வரைபடத்தில் இந்தியாவை ஒரு முக்கிய இடத்தில் நிலைநிறுத்த இன்னும் பல ஆண்டுகாலம் நீங்கள் சிறப்பாக ஆட்சி செய்ய நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என எல்லா வல்லமையும் உடைய இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.