செய்திகள்
கபில்தேவ்

இரண்டு கேப்டன் நமக்கு சரிபட்டு வராது: கபில்தேவ்

Published On 2020-11-20 16:25 GMT   |   Update On 2020-11-20 16:25 GMT
இந்திய கிரிக்கெட்டில் கேப்டன் பதவியை பிரித்து கொடுப்பது வழக்கத்தில் இல்லை என முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் விராட் கோலி கேப்டனாக இருக்கிறார். ரோகித் சர்மா ஒயிட்-பால் அணிகளுக்கு துணைக் கேப்டனாக இருக்கிறார். ஐபிஎல் தொடரில் கேப்டனாக ரோகித் சர்மா சாதனைப் படைத்து வருவதால் இந்தியாவின் டி20 அணிக்கு அவரை கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து கொண்டே இருக்கிறது.

மேலும், விராட் கோலியின் பணிச்சுமையை குறைப்பதற்காகவும் கேப்டன் பதவி வழங்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இந்தியாவின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில் ‘‘நம்முடைய வழக்கத்தில் இரு கேப்டன் என்ற முறை நடைமுறைப்படுத்த முடியாது. எம்என்சி நிறுவனத்தில் இரண்டு சிஇஓ-க்கள் இருக்க முடியாது. டி20 அல்லது ஐபிஎல் பற்றி நினைக்கத் தேவையில்லை. நீங்கள் முதல்தர கிரிக்கெட்டிற்குப்பின் டெஸ்ட், ஒருநாள் போட்டியை நோக்க வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News