செய்திகள்
மாயம்

போச்சம்பள்ளி அருகே கல்லூரி மாணவி மாயம்

Published On 2019-10-21 14:55 GMT   |   Update On 2019-10-21 14:55 GMT
போச்சம்பள்ளி அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாதது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சின்னபுளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 50). இவர் தனியார் பள்ளியில் டிரைவராக உள்ளார். இவரது மகள் சிவசக்தி (19). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த மாதம் 23-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து பாரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குபதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகிறார்.
Tags:    

Similar News