உள்ளூர் செய்திகள்
மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பல்லடம்:
பல்லடத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற 5 பேர் கைது இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பல்லடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு விடுமுறை நாட்களில் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில் பிரபு, பத்மநாபன், ரவி, மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வெட்டுப்பட்டான் குட்டை, மேற்கு பல்லடம், அறிவொளி நகர், ஆகிய இடங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற, சுந்தரம் (48), மகாலட்சுமி நகர், கனகராஜ்(40), அறிவொளி நகர், முருகன்(45), மேற்கு பல்லடம், பிரகாஷ்(28) மேற்கு பல்லடம், கருணை மலை(52), தெற்குப்பாளையம் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.