செய்திகள்
கொள்ளை

பாளையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சகோதரி வீட்டில் கொள்ளை

Published On 2021-10-09 11:21 GMT   |   Update On 2021-10-09 11:21 GMT
பாளையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. சகோதரி வீட்டில் 3 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

பாளை தாமிரபரணி நகரை சேர்ந்தவர் பாப்பா (வயது 60). இவர் கடந்த சில நாட்களாக அவரது உறவினருடன் சென்னையில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பாப்பா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதையறிந்த பக்கத்து வீட்டினர் பாளை ஐகிரவுண்டு போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று வீட்டில் பார்த்த போது பீரோவில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது.

பின்னர் போலீசார் சென்னையில் உள்ள பாப்பாவிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினர். வீட்டில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் மற்றும் 3 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாப்பா, பாரதிய ஜனதா கட்சி மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வின் சகோதரி ஆவார்.
Tags:    

Similar News