செய்திகள்
கோப்புபடம்.

கோட்டமங்கலம் - மடத்துக்குளம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2021-10-10 10:25 GMT   |   Update On 2021-10-10 10:25 GMT
வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம் புதூர், முருங்கப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
மடத்துக்குளம்:

உடுமலையை அடுத்துள்ள கோட்டமங்கலம், மடத்துக்குளம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 11- ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

அதன்படி கோட்டமங்கலம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட  வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம் புதூர், முருங்கப்பட்டி, குடிமங்கலம் நால்ரோடு, சிட்கோ, வேலப்பநாய்க்கன்புதூர், வரதராஜபுரம், குமாரபாளையம், பொன்னேரி, சுண்டக்காம்பாளையம், சுங்காரமுடக்கு பகுதிகளிலும், மடத்துக்குளம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கணேசபுரம், கழுகரை, கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், வேடபட்டி பகுதிகளிலும் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News