செய்திகள்
கொரோனா வைரஸ்

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று - புதிதாக 35 பேருக்கு பாதிப்பு

Published On 2021-06-12 22:30 GMT   |   Update On 2021-06-12 22:30 GMT
சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் தலைகாட்டத் தொடங்கியுள்ளது.
பெய்ஜிங்:

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.

இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தலைகாட்டத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 22 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


இதுதவிர 27 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. தற்போதைய நிலவரப்படி குவாங்டாங் மாகாணத்தில் தொற்று பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

சீனாவில் இதுவரை கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 91,394 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636  பேர் உயிரிழந்துள்ளனர்.
Tags:    

Similar News