செய்திகள்
சீமான்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: சீமான் 5 நாள் பிரசாரம்

Published On 2021-09-24 11:17 GMT   |   Update On 2021-09-24 11:17 GMT
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர் பிரசாரம் செய்கிறார்.
சென்னை:

நாம் தமிழர் கட்சி பொதுச்செயலாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர் பிரசாரம் செய்கிறார். அதன் விவரம் வருமாறு:-

27-ந்தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். 28-ந் தேதி ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களிலும், 29-ந் தேதி வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களிலும், 30-ந் தேதி கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும் பிரசாரம் செய்கிறார்.

அக்டோபர் 2-ந் தேதி திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

பிரசாரம் செய்யும் இடங்கள் மற்றும் நேர அட்டவணை விரைவில் வெளியிடப்படும். பிரசாரத்தின் போது அந்தந்த மாவட்ட கட்சி பொறுப்பாளர் அனைவரும் வேட்பாளர் படம், விவசாயி சின்னம் பொறித்த பதாதைகளோடு பெரும் திரளாக பங்கேற்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News