செய்திகள்
குடும்ப தகராறில் மாமனார், மாமியாரை கத்தியால் வெட்டியவருக்கு வலைவீச்சு
நெட்டப்பாக்கம் அருகே குடும்ப தகராறில் மாமனார், மாமியாரை கத்தியால் வெட்டிய மருமகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வில்லியனூர்:
நெட்டப்பாக்கம் அருகே உள்ள கரியமாணிக்கம் கோழிப்பண்ணை தெருவைச் சேர்ந்தவர் ராஜராஜன் (வயது 40). இவரது மனைவி ஹேமா(26). கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் ஹேமாவை, ராஜராஜன் அடித்துள்ளார். இதையறிந்த அவரது பெற்றோர், மகளின் வீட்டுக்கு சென்று மருமகனிடம் நியாயம் கேட்டனர்.
இதில் ஆத்திரமடைந்து ராஜராஜன் கத்தியால் வெட்டினார். இதில் மாமியார் செல்விக்கு இடது கையிலும், மாமனார் பெருமாளின் தலையிலும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து புகார் செய்ததன் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராஜராஜனை வலைவீசி தேடி வருகின்றனர்.