செய்திகள்
கொரோனா வைரஸ்

ஆம்பூர் திமுக எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

Published On 2021-02-23 12:07 GMT   |   Update On 2021-02-23 12:07 GMT
ஆம்பூர் தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 3 பேர் மட்டுமே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் ஆம்பூர் தி.மு.க. எம்.எல்.ஏ. வில்வநாதன் சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வில்வநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அவர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். டாக்டர் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வில்வநாதன் எம்.எல்.ஏ. வசித்து வந்த ஆம்பூர் மிட்டாளம் பகுதியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவரது மனைவி பத்மாவதி மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த உறவினர்கள், கட்சியினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News