செய்திகள்
வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை திருட்டு
வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை அனுப்பானடி ஆசிரியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரன்(வயது 62). இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். திரும்பி வந்தபோது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த சுமார் 4 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை அனுப்பானடி ஆசிரியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமாரன்(வயது 62). இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார். திரும்பி வந்தபோது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த சுமார் 4 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.