ஆன்மிகம்
ரெகுநாதபுரம் ஐயப்பன்

ரெகுநாதபுரம் ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை விழா

Published On 2021-09-16 06:08 GMT   |   Update On 2021-09-16 06:08 GMT
ராமநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோவிலின் இரண்டாம் பிரதிஷ்டை விழா மிக எளிமையாக நடைபெற்றது. விழா கோவில் தலைமை குருக்கள் மோகன் சாமி தலைமையில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் மெயின் சாலையில் வல்லபை ஐயப்பன் கோவில் உள்ளது.. இந்த கோவிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும் வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.

தற்பொழுது கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளதால் பக்தர்கள் யாரும் கோவிலில் அனுமதிக்கப்படுவதில்லை. இதைத் தொடர்ந்து வல்லபை ஐயப்பன் கோவிலின் இரண்டாம் பிரதிஷ்டை விழா நேற்று காலை மிக எளிமையாக நடைபெற்றது.

விழா கோவில் தலைமை குருக்கள் மோகன் சாமி தலைமையில் நடைபெற்றது. வல்லபை மஞ்சள்மாதா அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதில் பக்தர்கள் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அம்பாளை வேண்டி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை வல்லபை ஐயப்பன் கோவிலின் பக்தர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News