செய்திகள்
தற்கொலை

ஆரணியில் தீக்குளித்து பெண் தற்கொலை

Published On 2021-04-04 16:03 GMT   |   Update On 2021-04-04 16:03 GMT
ஆரணியில் பூ வியாபாரியை 2-வதாக திருமணம் செய்த பெண், கணவரின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணி:

ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன் என்பவரின் மகள் இந்துமதி (வயது 23). இவருக்கும் நெசல் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் திருமணமாகி 7 வயதில் ரித்திக் என்ற மகன் உள்ளான்.

இந்துமதி, கணவரை விட்டுப் பிரிந்து ஆரணி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த பூ வியாபாரி ஸ்ரீதர் என்பவரை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீதருக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.

26-ந்தேதி வீட்டில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வந்து இந்துமதி வாசலில் நின்றபடி உடலில் ஊற்றி தீக்குளித்தார். தீ உடல் முழுவதும் எரிந்ததும் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டு அலறினார். அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இந்துமதி பரிதாபமாக உயிரிழந்தார். ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News