ஆன்மிகம்
திருப்பதி

ஆர்ஜித சேவையில் தரிசனத்தை ரத்து செய்தவர்களுக்கும், ரீ-பண்டு வாங்காதவர்களுக்கும் காலக்கெடு நீட்டிப்பு

Published On 2021-04-24 03:53 GMT   |   Update On 2021-04-24 03:54 GMT
திருமலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியதால் ஏழுமலையான் கோவிலில் அனைத்துப் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது.
திருமலை

திருமலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியதால் ஏழுமலையான் கோவிலில் அனைத்துப் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இதனால் ஆர்ஜித சேவையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20-ந்தேதியில் இருந்து கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனமும், தரிசன முன்பதிவை ரத்து செய்த ஒருசிலருக்கு ரீ-பண்டும் வழங்கப்பட்டது.

இன்னும் பல பக்தர்களுக்கு ஆர்ஜித சேவையில் சாமி தரிசனம் செய்யாமலும், சாமி தரிசனத்தை ரத்து செய்து விட்டு, அதற்குரிய ரீ-பண்டுவை திரும்ப பெறாமலும் காத்திருக்கின்றனர். அந்தப் பக்தர்களுக்கு இந்த (2021) ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News