செய்திகள்
ஞானதேசிகன் குணமடைய பிரார்த்திக்கிறேன்- ஜிகே வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பிஎஸ் ஞானதேசிகன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானதேசிகன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என கூறியுள்ளார்.