செய்திகள்
விபத்து

திருப்பூரில் தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற பெண் பஸ் மோதி பலி

Published On 2019-10-25 09:32 GMT   |   Update On 2019-10-25 09:32 GMT
திருப்பூரில் தீபாவளிக்கு துணி எடுக்க சென்ற பெண் பஸ் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர்:

திருப்பூர் அடுத்த பல்லடம் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது40). இவர் அருள்புரத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

அதே நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் முத்துலட்சுமி (28). இவர்களுக்கு நேற்று தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. இதனையடுத்து தீபாவளிக்கு புதிய துணிகள் வாங்க முடிவு செய்தனர். அதன்படி தமிழ்ச்செல்வி, முத்துலட்சுமி அவரது மகன் கிருபாகரன் ஆகியோர் மொபட்டில் திருப்பூர் வந்தனர். வீரபாண்டி அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்ச்செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முத்துலட்சுமி, கிருபாகரன் ஆகியோர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News