உள்ளூர் செய்திகள்
மாயமான புவனேஸ்வரி

2 குழந்தைகளின் தாய் திடீர் மாயம்

Published On 2022-04-16 06:17 GMT   |   Update On 2022-04-16 06:17 GMT
சேலத்தில் 2 குழந்தைகளின் தாய் திடீர் மாயமானார்.

சேலம்:

சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள மோட்டாங்-குறிச்சி காந்தி நகரைச் சேர்ந்த சிவமூர்த்தி என்ப-வரின் மனைவி புவனேஸ்வரி (வயது 26). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி புவனேஸ்வரி வீட்டை விட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. காணாமல் போன அன்று  நீல கலர் டாப்ஸ், லெகின்ஸ் அணிந்திருந்தார்.

இதுபற்றி சிவமூர்த்தி  கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து புவனேஸ்வரி எங்கு சென்றார்? அவரை யாரும் கடத்திச் சென்றார்களா? எனபது குறித்து விசாரணை நடத்து வருகின்றனர்.
Tags:    

Similar News