செய்திகள்
தீ விபத்து

டெல்லி தனியார் சேமிப்புக் கிடங்கில் திடீர் தீ விபத்து

Published On 2021-09-25 22:12 GMT   |   Update On 2021-09-25 22:12 GMT
டெல்லியில் உள்ள தாப்ரி பகுதியில் ஒரு தனியார் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் தாப்ரி என்ற இடத்தில் தனியார் பல்வேறு தனியார் நிறுவனங்களும், சேமிப்புக் கிடங்குகளும் உள்ளன.

இந்நிலையில், அங்கு அட்டைகளை சேமித்து வைக்கும் ஒரு சேமிப்புக் கிடங்கில் நேற்று இரவு எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

தீயணைப்பு வாகனங்களில் சுமார் 14 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு ஒருவழியாக தீ கட்டுக்குள் வந்தது.

இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் விசாரணைக்குப் பிறகு தெரிய வரும் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News