ஆன்மிகம்
உங்கள் வீட்டில் உள்ள கெட்ட சக்தியை விரட்ட சாம்பிராணி தூபத்தோடு இதையும் சேர்த்து போடுங்க...

உங்கள் வீட்டில் உள்ள கெட்ட சக்தியை விரட்ட சாம்பிராணி தூபத்தோடு இதையும் சேர்த்து போடுங்க...

Published On 2020-11-16 05:49 GMT   |   Update On 2020-11-16 05:49 GMT
கெட்ட சக்தி, பில்லி, சூனியம், மருந்து வைப்பது எதுவாக இருந்தாலும், அதை நம் வீட்டிலிருந்து விரட்டி அடிக்க கூடிய சக்தி இந்த 4 பொருளுக்கு உண்டு. 48 நாள் சாம்பிராணி தூபத்தோடு சேர்த்து இதையும் போடுங்கள்.
உங்களுடைய பிரச்சினைக்கு உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி தான் காரணம் என்று நீங்கள் நம்புகிறீர்களா? யாராவது உங்களுக்கு, உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மருந்து வைத்து விட்டார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு உள்ளதா? ஏவல் பில்லி சூனிய பாதிப்பை நம்புபவர்களுக்கு மட்டும் சொல்லப்பட்டுள்ள பதிவு இது.

நாட்டு மருந்து கடைக்கு சென்று, அந்த கடையில் தேவதாரு பொடி, பூலான் கிழங்கு பொடி, பெரும் கோரை கிழங்கு பொடி, கட்டி சாம்பிராணி இந்த பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கிய பொருட்களை உங்களுடைய வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்து, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, விநாயகப் பெருமானின் முன்பு இந்த பொருட்களை எல்லாம் வைத்துவிட்டு மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் உங்களுடைய கஷ்டம் தீர வேண்டும் என்று.

அதன் பின்பாக 48 நாட்கள் தொடர்ந்து கட்டி சாம்பிராணியோடு மற்ற மூன்று பொருட்களை தூபம் போட்டு வர வேண்டும். இந்த மூன்று பொருட்களையும் ஒருசேர ஒரே அளவில் ஒரு பாட்டிலில் கலந்து வைத்துக்கொள்ளலாம். நாட்டு மருந்து கடைகளில் இந்த பொருட்கள் எல்லாம் பொடியுகவே கிடைக்கின்றது. இந்தப் பொடியை நீங்கள் போடத் தொடங்கிய நாளிலிருந்து 48 நாட்களுக்குள் நீங்கள் நிச்சயம் நம்பமுடியாத அளவிற்கு அதிசயம் உங்கள் வீட்டில் நடக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு வயிற்றுக்கு யாராவது மருந்து கொடுத்து இருந்தால் கூட, இந்த புகையை சுவாசிக்கும் போது அந்த மருந்து செயலிழக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

மிகவும் அற்புதமான பல விஷயங்களின் பொக்கிஷம் தான் நாட்டு மருந்து கடைகளில் விற்கும் மூலிகைகள். கெட்ட சக்திகளை விரட்டி அடிக்க கூடிய அற்புதமான ஆற்றல் வாய்ந்த பொடிகள் தான் இந்த 3 பொடிகளும். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த முறையை பின்பற்றி பயன் அடையலாம்.
Tags:    

Similar News