ஆன்மிகம்
திண்டுக்கல் ராஜக்காபட்டியில் ஆனந்த சுவாமி கோவில் குருபூஜை விழா
திண்டுக்கல் ராஜக்காபட்டியில் அருளாளர் ஸ்ரீ ஆனந்த சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் குருபூஜை விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் ராஜக்காபட்டியில் அருளாளர் ஸ்ரீ ஆனந்த சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் குருபூஜை விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுவது வழக்கம். அதன்படி 7-ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 8 மணியளவில் சிறப்பு யாக வேள்வி பூஜைகள், சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
அதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள், திண்டுக்கல், ராஜக்காபட்டி சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை எஸ்.ராமச்சந்திரன்-ராஜேஸ்வரி, எஸ். கணேசன்-ஜெயசித்ரா, எஸ்.அசோக் பாண்டியன்-சுஜித்ரா, இஷாந்த்குமார்- சுகன்யா ஆகியோர் செய்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள், திண்டுக்கல், ராஜக்காபட்டி சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை எஸ்.ராமச்சந்திரன்-ராஜேஸ்வரி, எஸ். கணேசன்-ஜெயசித்ரா, எஸ்.அசோக் பாண்டியன்-சுஜித்ரா, இஷாந்த்குமார்- சுகன்யா ஆகியோர் செய்திருந்தனர்.