ஆன்மிகம்
சுசீந்திரம் கோவில்

சுசீந்திரம் கோவிலில் சிவராத்திரி விழா நாளை நடக்கிறது

Published On 2021-03-10 05:15 GMT   |   Update On 2021-03-10 05:15 GMT
பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சிவராத்திரியையொட்டி நான்கு கால சாம பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சிவராத்திரியையொட்டி நான்கு கால சாம பூஜை நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை இரவு 11 மணிக்கு முதல் கால பூஜை தொடங்குகிறது.

அப்போது தாணுமாலய சாமிக்கு நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, சுவாமிக்கு தங்க அங்கி சாத்தி முதல் கால பூஜை நடக்கிறது. இதுபோன்று நள்ளிரவு 12.30 மணிக்கு 2-வது கால பூஜையும், 1.30 மணிக்கு 3-வது கால பூஜையும், 2.30 மணிக்கு 4 கால பூஜையும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 4 மணிக்கு கோவிலை சுற்றி ஸ்ரீபலி விழாவும் நடக்கிறது.

சிவராத்திரியையொட்டி அன்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்படும். 12 சிவாலயங்களில் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்று ஓடி வரும் பக்தர்கள் இறுதியாக சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News