செய்திகள்
கோப்புபடம்

வெள்ளகோவிலில் ரூ.21 லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்

Published On 2021-07-16 08:21 GMT   |   Update On 2021-07-16 08:21 GMT
ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர் மாவட்ட விவசாயிகள் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவிலில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் வியாழக்கிழமையன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர் மாவட்ட விவசாயிகள் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று 53 விவசாயிகள் 38 ஆயிரத்து 709 கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் காங்கயம், முத்தூர்,வெள்ளகோவில்,கொடுமுடி, ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 8 வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.61.20க்கும், குறைந்தபட்சமாக ரூ.48.56 க்கும் ஏலம் நடைபெற்றது. நேற்று மொத்தம் ரூ.21 லட்சத்து 66 ஆயிரத்து 421க்கு ஏலம் நடைபெற்றது.
Tags:    

Similar News