செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் மர்மமான முறையில் முதியவர் உயிரிழப்பு

Published On 2021-11-23 09:33 GMT   |   Update On 2021-11-23 09:33 GMT
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாக்கடை கால்வாயில் கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் கஞ்சம்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாயில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாக்கடை கால்வாயில் கிடந்த பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.  

அவர் குருவாயூரப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? அல்லது சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News