உள்ளூர் செய்திகள்
ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது மது விற்ற வாலிபரை கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர்.
அப்போது ஆறுமுகநேரி வடக்கு பஜார் அம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்த ஒரு நபர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் ஆறுமுகநேரி எஸ்.எஸ் கோவில் தெருவைச் சேர்ந்த பாலாஜி (25) என்பதும் அவர் அரசு முத்திரையுடன் கூடிய மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டு இருந்ததும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.