செய்திகள்
கைது

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தல்- வாலிபர் கைது

Published On 2019-11-08 06:54 GMT   |   Update On 2019-11-08 06:54 GMT
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் இருந்து இறங்கிய வாலிபர் சந்தேகப்படும்படி நின்றார். அவரிடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். பையை சோதனை செய்தபோது 12 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது. 

விசாரணையில் அவர் தேனியைச் சேர்ந்த விஜய் என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News