செய்திகள்
கைது

அய்யம்பேட்டை அருகே மாட்டுவண்டியில் மணல் கடத்திய 3 பேர் கைது

Published On 2019-11-22 08:35 GMT   |   Update On 2019-11-22 08:35 GMT
அய்யம்பேட்டை அருகே மாட்டுவண்டியில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அய்யம்பேட்டை:

அய்யம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் ராஜ் மற்றும் போலீசார் அய்யம்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அவர்கள் அய்யம்பேட்டை ரெயில்வே ஸ்டே‌ஷன் ரோட்டில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியே மணல் ஏற்றிய மாட்டு வண்டிகள் வந்து கொண்டிருந்தன.

அவற்றை தடுத்து நிறுத்திய போலீசார் வண்டி ஓட்டி வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அனுமதி மற்றும் உரிமம் இன்றி அய்யம்பேட்டை குடமுருட்டி ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் வண்டிகளை ஓட்டி வந்த அண்ணாநகர் ஜீவானந்தம் (வயது 25), ரஞ்சித்குமார் (22), மாகாளி புரம் அருண்குமார் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

Similar News