செய்திகள்
கோயம்பேடு மார்க்கெட்

கோயம்பேடு உணவு தானிய சந்தை நாளை திறப்பு

Published On 2020-09-17 13:54 GMT   |   Update On 2020-09-17 13:54 GMT
கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தை நாளை திறக்கப்பட உள்ளது.
சென்னை:

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் ஏப்ரல் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதனால், காய்கறிகளை வாங்க சில்லறை விற்பனை சந்தையில் மக்கள் குவிந்து, கொரோனா தொற்று பரவியதால் மே 5-ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது.

இதற்கிடையே, சென்னையில் ஓரளவு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வணிகர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
 
இதையடுத்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த மாதம் 27-ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தையை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி செப்டம்பர் 28-ம் தேதி திறக்கப்படும். செப்டம்பர் 18-ம் தேதி முதல் கோயம்பேடு சந்தை தானிய அங்காடி  திறக்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தை நாளை திறக்கப்பட உள்ளது. தமிழக அரசு தங்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News