செய்திகள்
சுவாமிமலை அருகே பாம்பு கடித்து பெண் மரணம்
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே பாம்பு கடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிஸ்தலம்:
சுவாமிமலையை அடுத்த ஆலமன்குறிச்சி, அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி மருதாம்பாள் (வயது 50). இவர் கடந்த 17-ந்தேதி திருப்புறம்பியம் கிராமத்திலுள்ள பருத்தி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது.
இதையடுத்து அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் மருதாம்பாளை சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து சுவாமிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாமிமலையை அடுத்த ஆலமன்குறிச்சி, அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி மருதாம்பாள் (வயது 50). இவர் கடந்த 17-ந்தேதி திருப்புறம்பியம் கிராமத்திலுள்ள பருத்தி வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை பாம்பு கடித்தது.
இதையடுத்து அருகிலுள்ளவர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் மருதாம்பாளை சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து சுவாமிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.