செய்திகள்
கோப்பு படம்

ஓசூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

Published On 2021-11-20 08:18 GMT   |   Update On 2021-11-20 08:18 GMT
ஓசூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

ஓசூர் ஆவலப்பள்ளி அருகே உள்ள பெத்தகுள்ளுவை சேர்ந்தவர் நாராயணப்பா. இவரது மகன் சதீஷ் (வயது 20). விவசாயி. இவர் நேற்று காலை தனது தக்காளி தோட்டத்திற்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் இருந்த மின்சார வயரில் வவ்வால்கள் அமர்ந்திருந்தன. அவை ஒன்றோடு ஒன்று உரசியதில் மின் கம்பி ஒன்று அறுந்து கீழே விழுந்தது. இதை கவனிக்காத சதீஷ் அந்த மின்சார வயரை மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News