செய்திகள்
கைது

மதுரையில் கள்ளக்காதலியை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது

Published On 2021-09-17 10:09 GMT   |   Update On 2021-09-17 10:09 GMT
மதுரையில் கள்ளக்காதலியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:

மதுரை கீரைத்துறை இருளப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோலைராஜா (வயது 26). சுமை தூக்கும் தொழிலாளி.

இவர் அதே பகுதியில் முன்பு வசித்த திருமணமான 24 வயது பெண்ணுடன் நெருங்கி பழகினார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இந்த விவகாரம், இருவரது குடும்பத்திற்கும் தெரியவந்தது. இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அந்தப்பெண் சோலை ராஜாவுடன் கள்ளக்காதலை துண்டித்துக் கொண்டார்.

அதன் பிறகு அந்த பெண்ணின் குடும்பம் கரும்பாலைக்கு குடிபெயர்ந்தது. இருந்த போதிலும் சோலை ராஜாவால் அந்தப் பெண்ணை மறக்க முடியவில்லை.

அவர் நேற்று மாலை கரும்பாலைக்கு வந்தார். வீட்டில் அந்த பெண்ணை தவிர யாரும் இல்லை. சோலைராஜா வழக்கம் போல உறவுக்கு அழைத்து உள்ளார். இதற்கு அந்தப் பெண் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் வலுத்தது.

அப்போது சோலைராஜா அரிவாளை காட்டி மிரட்டி உடன்பட வைக்க முயன்றார். ஆனாலும் அந்தப் பெண் மறுத்து விட்டார். ஆத்திரம் அடைந்த சோலைராஜா அந்த பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பி ஓடினார்.

ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் வழக்குப் பதிவு செய்து கள்ளக் காதலியை வெட்டிக்கொல்ல முயன்றதாக லோடுமேன் சோலைராஜாவை கைது செய்தார்.
Tags:    

Similar News