வழிபாடு
திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பகவானுக்கு சந்தனகாப்பு அலங்காரம்

திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பகவானுக்கு சந்தனகாப்பு அலங்காரம்

Published On 2022-03-27 04:43 GMT   |   Update On 2022-03-27 04:43 GMT
திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பகவானுக்கு சந்தனகாப்பு அலங்காரம், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து தயிர் பள்ளயம் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 1½ வருடங்களுக்கு ஒருமுறை ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி இடம்பெயரும் ராகு பெயர்ச்சி விழா கடந்த 21-ந்தேதி நடைபெற்றது.

ராகுபகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததையொட்டி 2-ம் கட்டமாக கடந்த 23-ந்தேதி முதல் நேற்று வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. மாலை 6 மணி அளவில் ராகு பகவானுக்கு சந்தனகாப்பு அலங்காரம், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து தயிர் பள்ளயம் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சி.நித்யா, தக்கார் ஆர். இளையராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News