இந்தியா
கோப்புப் படம்

மீன்பதப்படுத்தும் ஆலையில் ரசாயன கசிவு - 20 பேருக்கு மூச்சுத்திணறல்

Published On 2022-01-12 01:16 GMT   |   Update On 2022-01-12 01:16 GMT
கர்நாடகாவில் மீன் பதப்படுத்தும் ஆலையில் ரசாயனக் கசிவை தொடர்ந்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

fish processing plant, மீன்பதப்படுத்தும் ஆலை

கர்நாடகாவில் மீன் பதப்படுத்தும் ஆலையில் ரசாயன கசிவை தொடர்ந்து 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மங்களூரு:

கர்நாடக மாநிலம் மங்களூருவில் பைக்கம்படி என்ற பகுதியில் மீன் பதப்படுத்தும் ஆலை உள்ளது. இதில், 80 பேர் வரை நேற்று பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில், மீன் பதப்படுத்தும் ஆலையில் திடீரென ரசாயனக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பணியாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து, பணியாளர்கள் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரசாயன கசிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என மங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News