செய்திகள்
ஈரோட்டில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பங்கு சந்தை அதிபர் திடீர் மாயம்
ஈரோட்டில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பங்கு சந்தை அதிபர் திடீர் மாயனார். இதுதொடர்பாக மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு, பெரியசேமூர், எல்லப்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 37). இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரவிக்குமார் கடந்த ஒன்றை வருடமாக பங்குச்சந்தை நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில் பங்குச்சந்தை நிறுவனத்தில் திடீர் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்து காணப்பட்டார். ரவிக்குமாருக்கு அவரது மனைவி புவனேஸ்வரி ஆறுதல் கூறி வந்தார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ரவிக்குமார் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு கிளம்பி சென்றார். மதியம் புவனேஸ்வரி ரவிக்குமாருக்கு போன் செய்து சாப்பிட அழைத்துள்ளார். அதற்கு ரவிக்குமார் நான் சிறிது நேரத்தில் வருகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் மாலை வரை அவர் வீட்டுக்கு வரவில்லை. பின்னர் மாலை மீண்டும் புவனேஸ்வரி ரவிக்குமாருக்கு போன் செய்துள்ளார். ஆனால் போன் அணைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து புவனேஸ்வரி கணவரை பல்வேறு இடங்களில் தேடி உள்ளார். ஆனால் கணவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலை யத்தில் புவனேஸ்வரி புகார் செய்தார். அதில் மாயமான தனது கணவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை தேடி வருகின்றனர்.
ஈரோடு, பெரியசேமூர், எல்லப்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 37). இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ரவிக்குமார் கடந்த ஒன்றை வருடமாக பங்குச்சந்தை நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில் பங்குச்சந்தை நிறுவனத்தில் திடீர் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக அவர் மனமுடைந்து காணப்பட்டார். ரவிக்குமாருக்கு அவரது மனைவி புவனேஸ்வரி ஆறுதல் கூறி வந்தார்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ரவிக்குமார் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு கிளம்பி சென்றார். மதியம் புவனேஸ்வரி ரவிக்குமாருக்கு போன் செய்து சாப்பிட அழைத்துள்ளார். அதற்கு ரவிக்குமார் நான் சிறிது நேரத்தில் வருகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் மாலை வரை அவர் வீட்டுக்கு வரவில்லை. பின்னர் மாலை மீண்டும் புவனேஸ்வரி ரவிக்குமாருக்கு போன் செய்துள்ளார். ஆனால் போன் அணைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து புவனேஸ்வரி கணவரை பல்வேறு இடங்களில் தேடி உள்ளார். ஆனால் கணவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலை யத்தில் புவனேஸ்வரி புகார் செய்தார். அதில் மாயமான தனது கணவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை தேடி வருகின்றனர்.