செய்திகள்
கோப்புபடம்

இளம்பெண்ணுக்கு மது கொடுத்து கற்பழித்த கும்பல் - நண்பர்கள் 2 பேர் கைது

Published On 2021-09-11 09:12 GMT   |   Update On 2021-09-11 09:12 GMT
கோழிக்கோட்டில் மது கொடுத்து இளம்பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ளது அந்தோளி. இங்கு வசித்து வருபவர் அஜ்நாஸ் (வயது 30). இவருடைய நண்பர் பகத் (31). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் மற்ற 2 நண்பர்களுடன் கோழிக்கோட்டில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.

இந்த நிலையில் கொல்லத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு அஜ்நாசுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணை அவர் உடனடியாக புறப்பட்டு கோழிக்கோடு வர கூறினார். அந்தப் பெண் நேற்று காலை கோழிக்கோடு வந்து சேர்ந்தார். அவரை அஜ்நாஸ் மற்றும் அவரது நண்பர் ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அங்கு அந்தப் பெண்ணுக்கு 4 பேரும் சேர்ந்து மதுவில் போதை மருந்து கலக்கி கொடுத்தனர். இதனால் அந்த பெண் மயங்கி விழுந்தார். அப்போது 4 பேரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை கற்பழித்தனர்.

இதனால் அந்த இளம்பெண்ணின் நிலைமை மோசமானது. இதை அறிந்த மற்ற நண்பர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இந்த இளம்பெண் இறந்து விடுவாளோ என்ற பயத்தில் அஜ்நாஸ் மற்றும் பகத் அந்த இளம்பெண்ணை கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இளம்பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர் பெண் கற்பழிக்கபட்டு இருந்ததை கண்டு கோழிக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து ஆஸ்பத்திரியில் இருந்த இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News