செய்திகள்
கோப்புபடம்

தஞ்சை அருகே 22 மது பாட்டில்கள் பறிமுதல் - ஒருவர் கைது

Published On 2020-10-22 12:55 GMT   |   Update On 2020-10-22 12:55 GMT
தஞ்சை அருகே உள்ள கன்னித்தோப்பு பகுதியில் அனுமதியின்றி மது விற்றவரை போலீசார் கைது அவரிடம் இருந்து 22 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
சாலியமங்கலம்:

தஞ்சை அருகே உள்ள கன்னித்தோப்பு பகுதியில் அனுமதியின்றி மது விற்கப்படுவதாக அம்மாப்பேட்டை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு ஆற்று பாலம் பகுதியில் மது விற்றுக்கொண்டிருந்தவரை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை செய்தனர். 

விசாரனையில் அவர் மாரியம்மன்கோவில் சாலைக்கார தெருவை சேர்ந்த முஸ்தபா (வயது 41) என்பதும், மது விற்பணை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முஸ்தபாவை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 22 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News