செய்திகள்
செங்குன்றம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை
செங்குன்றம் அருகே கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்:
செங்குன்றம் நாரவாளி குப்பம் திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் அமீது (35). இவர் பெயிண்டராக வேலை செய்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்றார். இருந்தும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்தார். நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்த அவர் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார்.
இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் செங்குன்றம் போலீசில் புகார் செய்தனர்.
உடனே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.