செய்திகள்
திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்: 2 பேர் கைது
திருவள்ளூர் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த ஆட்டோவை கைப்பற்றி மணல் கடத்தியதாக திருப்பாச்சூர் கோட்டை காலனியை சேர்ந்த ஆட்டோ உரிமையாளரான வெற்றி (வயது 36), உடன் வந்த திருப்பாச்சூரை சேர்ந்த ராஜ் (45) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.