செய்திகள்
ஸ்ரீராமரின் எல்லையற்ற கருணை எப்போதும் நாட்டு மக்கள் மீது நிலைத்திருக்கட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ராம நவமி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்து வருமாறு:-
ஸ்ரீராமரின் எல்லையற்ற கருணை எப்போதும் நாட்டு மக்கள் மீது நிலைத்திருக்கட்டும். நோய்த் தொற்றை தவிர்க்க மக்கள் அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். மருந்தை செலுத்தி கொண்டு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்ற மந்திரத்தை மனதில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.