செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

தமிழகத்தில் இன்று 503 பேருக்கு புதிதாக கொரோனா- 6 பேர் பலி

Published On 2021-01-28 12:52 GMT   |   Update On 2021-01-28 12:52 GMT
தமிழகத்தில் இன்று புதிதாக 503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 36 ஆயிரத்து 818 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 151 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 544 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 19 ஆயிரத்து 850 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News