செய்திகள்
திருச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
திருச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி பெரிய மிளகுபாறை புதுத்தெருவில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக செசன்சு கோர்ட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு சூதாடிய அழகுமலை (வயது 45), துரைராஜ் (55), பீட்டர் (65), பாலகிருஷ்ணன் (60) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.300 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.